×

பாலியல் தொந்தரவால் பெண் தற்கொலை முயற்சி-வாலிபர் கைது

திருக்கோவிலூர் : விழுப்புரம்  மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம்  மனைவி செல்லம்மா (26) இவர்களுக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்  நடந்து ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் தனது  கணவரின் சித்தப்பா மகன் அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் விஜயகாந்த் (26)  என்பவர் செல்லம்மா நடத்தி வந்த பழக்கடைக்கு உதவி செய்வது போல் அடிக்கடி வந்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில்  நேற்று மாலை மனமுடைந்த செல்லம்மா வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டுமயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகிறார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகாந்தை கைது செய்தனர்….

The post பாலியல் தொந்தரவால் பெண் தற்கொலை முயற்சி-வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Chellamma ,Villupuram district ,Veerabandi village ,
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்